News March 28, 2024
கோவை: கலெக்டர் அறிவுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் போது, பயணச்சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங் விபரங்களை சரிபார்த்த பின்னர், செலவிற்காக தொகை வைத்திருந்தால், முழு தொகையும் பறிமுதல் செய்யக்கூடாது எனவும், கைச்செலவுக்கு ரூ.10,000 யை தவிர்த்து மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
கோவையில் ₹1.65 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு

கோவை மக்களே சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மானியமாக ரூ.1,65,625/ வழங்கப்படும். இதற்கு தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம் என என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாா் தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)
News August 14, 2025
வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.
News August 14, 2025
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ராஜன் குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளான அவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.