News February 8, 2025
சேலத்தில் தினந்தோறும் தொடரும் தற்கொலைகள்

சேலம் மாநகரில் கடந்த 10 நாட்களாக தினந்தோறும் குறைந்தபட்சம் மூன்று தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. அதன்படி கிச்சிப்பாளையம் பகுதியில் ஜெயராமன் என்பவரும், அஸ்தம்பட்டி பகுதியில் சசிகலா என்பவரும், சூரமங்கலம் பகுதியில் பிரபாகரன் என்பவரும் இன்று பல்வேறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாநகரில் மட்டும் தினமும் தற்கொலைகள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
சேலம்: வங்கி வேலை வேண்டுமா? APPLY NOW!

சேலம் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
சேலம் 1 லட்சத்தை கடந்த உரிமைத்தொகை மனுக்கள்!

கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலத்தில் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து விதமான குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, நேற்று வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1,01,726 மனுக்கள் குவிந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
சேலம்: தமிழ் கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்!

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.