News February 8, 2025
பாம்பன் பாலம் திறப்பின் இறுதி கட்ட ஆய்வு – ஒத்திகை

சுமார் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட இருப்பதால் அதன் இறுதி கட்ட ஆய்வு மற்றும் ஒத்திகை நிகழ்வு இன்று (பிப்-8) நடைபெற்றது. தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்து கொடியசைத்தார். ஒரே நேரத்தில் 2 பாலங்கள் திறந்து கப்பல் மற்றும் இரயில் கடந்த நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர்.
Similar News
News August 24, 2025
BREAKING இராம்நாடு மக்களுக்கு குட் நியூஸ்!

ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGCக்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், “ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுமாறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தியதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
News August 24, 2025
BREAKING: பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 4 மாதங்களில் விடைபெற தயாராகியது.