News February 8, 2025
வட மாநில தொழிலாளர்களுக்குள் வாக்குவாதத்தில் கொலை

கடையநல்லூர் அருகே உள்ள புன்னியாபுரம் முந்தல் பகுதியில் தனியார்க்கு சொந்தமான நெல் அரவைஆலையில் டெல்லியைச் சேர்ந்த சங்கர் சரோஜ் மகன் அணி கோட் மற்றும் நல்லா சரோஜ் மகன் உபேந்தர் 2 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் வேலை பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உபேந்தர் கத்தியால் அணி கேட்டை குத்தியதில் சம்பவ இடத்தில் அணி கேட் பலியானார். போலீசார் விசாரணை
Similar News
News September 29, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
News September 29, 2025
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அறிவிப்பு

சரஸ்வதி பூஜை, விஜயதசமி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல் விருதுநகர் சிவகாசி, தென்காசி வழியாக செல்லும் இது ஒரு சேவை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 29, 2025
தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.