News February 8, 2025
மூதாட்டிக்கு பாலியல் வன்புணர்வு வாலிபர் கைது

விருதுநகர் சத்திரப்பட்டிஅருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி .இவர் சமுசிகாபுரம் மெயின்ரோட்டில் இரவு நடந்து சென்றபோது அவ்வழியே டூ வீலரில் வந்த வாலிபர் செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி காட்டுப்பகுதிக்கு சென்று மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார். கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் சுந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 28, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறப்பதில் சிக்கல்

சிவகாசி பகுதியில் அக்.31 அன்று பட்டாசு ஆலைகளை திறந்து அடுத்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியை தொடங்க சிலர் முடிவு செய்துள்ளனர். சில பட்டாசு ஆலைகள் பிரதோஷமான நவ.3 அன்று சிறப்பு பூஜையுடன் உற்பத்தியை தொடங்க உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு ஆலைகளை விரைவில் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
News October 28, 2025
சாத்தூர்: மணல் திருடியவருக்கு ஓராண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வம்(39). இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோல்வார்பட்டி அணை பகுதியில் டிராக்டரில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சாத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜன் மணல் திருடிய மரிய செல்வத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 28, 2025
விருதுநகர்: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை.,

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


