News March 28, 2024
தேனி: 41 மதுபாட்டில்கள்: 2 பேர் கைது

தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தவசிராஜன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டுபத்திரகாளி அம்மன் கோயில் அருகே கூடலூரை சேர்ந்த ரமேஷ், வீரணன் ஆகிய இருவரும் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அருகில் இருந்த முட்புதரை சோதனையிட்டபோது, அரசு அனுமதி இன்றி விற்க வைத்திருந்த 41 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 20, 2025
ஏலக்காய் மாலை அணிவித்த தேனி மாவட்ட தலைவர்

திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருங்கோட்ட அளவிலான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் P.இராஜபாண்டியன் கலந்து கொண்டு மாநில தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேராசிரியர் இராம ஶ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News April 20, 2025
தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி 21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .