News March 28, 2024
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
ஈரோடு கலெக்டர் அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோட்டத்தில் பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பனை மரங்கள் பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல்வேறு கலைப் பொருட்கள், பதநீர் போன்றவற்றிற்காக மக்கள் பலர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி கடிதம் இல்லாமல் வெட்டக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிவகிரி, வேட்டுவபாளையம், விளக்கேத்தி, காஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையம், செட்டிபாளையம், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, 68,80 வேலாம்பாளையம், பவானி நகர், ஊராட்சிக்கோட்டை, மைலம்பாடி, காளிங்கராயன்பாளையம், கூடுதுறை, சத்தி, பேருந்து நிலையம், உக்கரம், அரியப்பம், சிக்கரசம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


