News February 7, 2025

டீசல் குடித்த குழந்தை பலி

image

கடலூர் மாவட்டம் வடலூரில் தண்ணீர் என்று நினைத்து டீசலை குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் (29) மகள் மைதிலிக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவர்களது வீட்டில் அடுப்பெரிப்பதற்காக பாட்டிலில் டீசல் வைத்திருந்தனர். அதனை தண்ணீர் என்று நினைத்து மைதிலி குடித்ததாகத் தெரிகிறது. உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Similar News

News September 7, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், ஓரிரு நாள்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 7, 2025

வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க!

image

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஈ-செலான் அனுப்பி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், அதனால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் மூலம் mparivahan செயலி எனக் கூறப்படும், ஒரு APK ஃபைல் அனுப்பப்பட்டு மோசடி நடக்கிறதாம். பொதுமக்கள் கவனமாக இருக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. உங்களுக்கும் மோசடி மெசேஜ் வந்ததா?

News September 7, 2025

SCIENCE vs MYTH: கிரகணத்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

image

அறிவியலின் படி *கிரகணத்தின் போது கர்ப்பிணி வெளியே செல்வதால், பிறக்கும் குழந்தைக்கு தழும்பு ஏற்படும் என்பது உண்மையல்ல *கிரகணத்தின்போது சமைப்பதாலோ, சாப்பிடுவதாலோ உணவு நஞ்சாகாது *சந்திர கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம், எந்த பாதிப்பும் ஏற்படாது. *கிரகணத்தால் தண்ணீரோ, தாவரங்களோ அசுத்தமாகாது *கிரகணத்தின் போது குளிக்காமல் இருப்பது பாவம் என்பது மத நம்பிக்கையே தவிர, அறிவியல் அடிப்படையிலானது அல்ல.

error: Content is protected !!