News February 7, 2025
அதிமுக வழக்கில் பிப்ரவரி 12 தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில், கட்சியில் எந்தப் பிளவும் இல்லை என்று EPS கூறியிருந்தார். கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் OPS பக்கம் இருப்பதாக ரவீந்திரநாத் கூறியிருந்தார். இந்நிலையில் தீர்ப்பு யாருக்கு சாதகமாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News September 8, 2025
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க USA திட்டமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரிகளை விதித்தால், அவர்கள் அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என USA கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். EU-வுடன் இணைந்து இதை செயல்படுத்தினால், ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்வதோடு, புடினும் வழிக்கு வருவார் என அவர் பேசியுள்ளார். இதனால், இந்தியா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.
News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.