News March 28, 2024
தற்கொலை மிரட்டல் விடுத்து ரோடு போட வைத்தேன்

தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் மத்திய அரசு சாலை அமைத்ததாக எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் வாக்கு சேகரித்த அவர், “கடந்த தேர்தலில் இங்கு ரிங் ரோடு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது குறித்து பேசும் போது, இப்போது முடியாது எனக் கூறினார். அப்படி என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றேன். அதன் பிறகே அவர் சாலை அமைக்க நிதி ஒதுக்கினார்” என்றார்.
Similar News
News January 14, 2026
தெருநாய்களை கொல்வதாக தேர்தல் வாக்குறுதி!

தெலங்கானாவில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை கொல்வோம் என பல வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது வெற்றி பெற்றதும், தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர்கள் தேடி தேடி கொன்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 14, 2026
இந்திய விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் டிரம்ப்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> அறிவித்துள்ளார். இதனால் இந்திய விவசாயிகள், அரசி ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. ஈரான் அதன் மொத்த அரசி தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிடம் வாங்குகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் அனுப்பப்பட்ட அரிசிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
News January 14, 2026
ஜனவரி 14: வரலாற்றில் இன்று

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.


