News February 6, 2025
மலக்கழிவு விவகாரம்: காவல்துறை விளக்கம்

திருச்சி வடக்கு தையல்கார தெருவில் மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் மலக்கழிவு போன்ற பொருள் கிடப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் அதனை அப்பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் வீசியிருப்பதும், இது பற்றி விசாரணை தொடர்வதாகவும், மேலும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அதனை சுத்தம் செய்து விட்டனர் என்றும், இது திட்டமிட்டு செய்யப்படவில்லை என்றும் காவல்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News August 14, 2025
சென்னை – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளிக்கு இன்று (ஆக.14) இரவு இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 11:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை (ஆக.15) காலை 7:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

திருச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
சுதந்திர தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

நாளை (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மதியம் 12 மணிக்கு பொது விருந்து நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வு இன்றி அமர்ந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த பொது விருந்து நடக்க இருப்பதாகவும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.