News March 28, 2024
ஈரோடு மக்களவை தொகுதியில் 44 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மாலை வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசிய கட்சிகள்,அங்கிகாரம் பெற்ற மற்றும் பெறாத கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேர் ஈரோடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News February 14, 2026
ஈரோட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை!

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (14.02.2026) வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்து ஆளுநரை வரவேற்றனர்.
News February 14, 2026
ஈரோடு: FREE வீடு கட்டப் போறீங்களா?

ஈரோடு மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE யாக செய்ய ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 14, 2026
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் மகளிருக்கு தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சு. முத்துசாமி பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


