News March 28, 2024
ராமேஸ்வரம்: மீனவர்கள் 7 பேர் விடுதலை

ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 படகுகள், அதிலிருந்த மீனவர் 7 பேரை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை மார்ச் 21 அதிகாலை கைதுசெய்தது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர் 7 பேரையும் இன்று (மார்ச் 28) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மீனவர் 7 பேரையும் நிபந்தனையுடன் நீதிபதி லத்தீப் விடுவித்து உத்தரவிட்டார்.
Similar News
News April 14, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

இன்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
News April 13, 2025
நயினார்கோவில் நாகநாதர் கோயிலின் சிறப்பு

பரமக்குடி நயினார்கோவிலில் அமைந்துள்ளது நாகநாதர் கோயில். இங்கு மருதம், வில்வம் என 2 விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள் இந்த புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; இந்த புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.*ஷேர் பண்ணுங்க