News February 5, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட சேலம் டவுன் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம் பட்டி, சூரமங்கலம்சரகம் பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்

Similar News

News September 11, 2025

சேலம்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

சேலம் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

சேலம் மாவட்டத்தில் 263.1 மி.மீ மழைப்பதிவு!

image

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 263.1 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாநகரில் 62.6 மி.மீ. மழையும், டேனிஷ்பேட்டையில் 60 மி.மீ. மழையும், மேட்டூரில் 51.4 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 29.4 மி.மீ. மழையும், எடப்பாடியில் 18 மி.மீ. மழையும், ஓமலூரில் 12.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

News September 11, 2025

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த 26,165 பேருக்கு அபராதம்!

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த சுமார் 26,165 பேரிடம் இருந்து ரூபாய் 1.82 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணிக்கும் மக்கள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால் டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!