News February 5, 2025
அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நலதிட்ட உதவி வழங்கும் விழா

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நாளை 06.02.2025 வியாழக்கிழமை, காலை 09.30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், இராஜேந்திரபுரம் கிராமத்தில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கலந்து கொள்ள உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Similar News
News November 9, 2025
புதுகை: புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கான மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 % அல்லது 75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு 12th தேர்ச்சி பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த புதிய தலைமுறை தொழில் முனைவோர் www.msme online.tn.gov.in/neets என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, அதனை மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 9, 2025
புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுமடை SOC-யில் நேற்று அடையாளம் தெரியாத யாசகம் பெறும் நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விராலிப்பட்டி சரக VAO அளித்த புகாரின் அடிப்படையில், கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு தடை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (10.11.2025) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று (09.11.2025) மற்றும் நாளை (10.11.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.


