News March 28, 2024
பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் அணிவகுப்பு

திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
Similar News
News December 5, 2025
திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழக்கரை, சீனிவாசபுர்ம், ராக்கியாபாளையம், முத்துச்செட்டிபாளையம், மடத்துப்பாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 5, 2025
பல்லடம் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரை சேர்ந்தவர் நாச்சம்மாள் 78. இவரின் வீட்டுக்கு ஹோட்டலில் வேலை பார்க்கும் பிரபு தென்னை மட்டை எடுப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிரபு, அவரது நகைகளை பறிக்க திட்டமிட்டு, நண்பன் உசேன் முகமதுவை வரவழைத்தார். இருவரும் இணைந்து, 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 5, 2025
திருப்பூரில் அருமையான வாய்ப்பு DON’T MISS

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இன்று 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55944. இத்தகவலை SHARE பண்ணுங்க!


