News March 28, 2024
தரமான அரிசி வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் 1538 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மாதந்தோறும் வாங்குகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் வழங்கப்பட்ட அரசி தரமில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். அப்போது அரிசி தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Similar News
News November 17, 2025
கோவை ஆசிரியர் தகுதி தேர்வில் 1526 பேர் ஆப்சென்ட்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு(TET)நேற்று, இன்று என இரு தினங்கள் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2 தேர்விற்கு 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,844 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். மீதமுள்ள 1526 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
News November 16, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமல். அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


