News March 28, 2024
கோடை காலத்தில் கடைபிடிக்க வழிமுறைகள்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
கராத்தே, சிலம்ப பயிற்சி நிறுவனங்களின் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி / கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களிடமிருந்து சுய விண்ணப்பங்கள் வருகின்ற 21.10.2025 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் உள்ள மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் நெறி மையத்தில் 17 -10 -2025 வெள்ளிக்கிழமை, காலை 10:30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வி தகுதி உடைய இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
சிவகங்கை: 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, மதுரை, ராம்நாடு, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சிவகங்கையில் இன்று (அக் 14) முதல் அக். 18 (சனி) வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.