News February 4, 2025
எகிறும் மார்க்கெட்: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,208 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மொத்தமுள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. நிப்டியும் 298 புள்ளிகள் உயர்ந்து 23,659 ஆக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வு, வட்டிவிகிதத்தை RBI குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச மார்க்கெட்டில் பாசிடிவ் மாற்றங்கள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
Similar News
News September 8, 2025
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்: அன்புமணி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் வழங்கிய அனுமதியை திரும்ப பெற மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு TN அரசு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது வரை அது ரத்தாகவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உழவர்களுக்கு துரோகம் இழைக்காமல் TN அரசு அந்த அனுமதி ரத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.