News February 4, 2025
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அரசை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் (பிப்ரவரி 8) அன்று நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு, தர்மபுரி எம்.பி வழக்கறிஞர் மணி, தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, குத்தாலம் அன்பழகன் ஆகியோர் கண்டன பொதுக்கூட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 23, 2025
கரும்பு தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 24.09.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேளாண் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (செப்.22) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News September 22, 2025
தருமபுரி அருகே தந்தை, மகனுக்கு ‘காப்பு’

கடத்துார் அடுத்த மணியம்பாடி வருவாய் கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், அவரது மகன் சிவலிங்கம், ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.