News February 4, 2025

எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழப்பு 

image

ஓசூர் அருகே சானசந்திரம் வ. உ. சி நகரை சேர்ந்த மனோகர் (25) எலக்ட்ரீசியன், நேற்று மாலை ஓசூர் கசவு கட்டா பகுதி மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பெங்களூர் நோக்கி படையெடுத்துள்ளதால் கிருஷ்ணகிரி ஓசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, மார்கெட் பகுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடத்திலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

கிருஷ்ணகிரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

error: Content is protected !!