News February 4, 2025

விவேகானந்தர் மண்டபத்தில் 2113 829 பேர் பார்வை

image

கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனை பார்ப்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகின்றனர். இவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இந்த நினைவகங்களை பார்வையிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சத்து 13 ஆயிரத்து 829 பேர் படகுமூலம் சென்று நினைவகங்களை பார்வையிட்டுள்ளனர்.

Similar News

News July 11, 2025

குமரி: பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

image

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). இவர் இன்று மதியம் லெட்சுமிபுரத்தில் மர்ம நபர்களால் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 11, 2025

ஊரக வேலை உறுதித் திட்ட குறை கேட்கும் முகாம்

image

குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையில் குறை கேட்கும் முகாம் நடைபெற உள்ளது. ஜூலை.15 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.11) நீர்மட்ட விவரம் பேச்சிப்பாறை அணை 41.56 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.60 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.19 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.28 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 225 கனஅடி, பெருஞ்சாணிக்கு 24 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!