News March 28, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
கள்ளக்குறிச்சி: திருட்டு வழக்கில் 2 கைது

அரசம்பட்டு, மஞ்சபுத்தூர் கிராமங்களில், “கேரள மூணார் மிளகுத் தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை” எனக் கூறி பைக்கில் வந்த இருவர், ஆடுகளைத் திருடிச் சென்றனர். ஆடுகள் சத்தம் எழுப்பாமல் இருக்க, அவற்றின் வாயை பிளாஸ்டிக் டேப் கொண்டு கட்டி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த ஆண்டனி (50), அஜய்குமார் (41) ஆகிய இருவரையும் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News October 28, 2025
கள்ளக்குறிச்சி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <


