News March 28, 2024
வேலூர் தொகுதியில் போட்டியிட 50 பேர் மனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சிகள், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
வேலூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News October 29, 2025
வேலூருக்கு வருகை தரும் துணை முதல்வர்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (அக்டோபர் 30) வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவர் காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் பிற்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
News October 29, 2025
வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று ( அக்.28 ) நடத்தப்பட்ட சோதனையில் 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 1 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.


