News February 2, 2025

பட்டாசு தொழிலாளர்களின் கல்வி செலவு – அரசாணை வெளியிடுக

image

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வரின் அறிவிப்பின் படி அரசாணை வெளியிட வேண்டும் என தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்க தலைவர் தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ரூ.20 லட்சம், பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

விருதுநகர் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு…!

image

விருதுநகர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

கூமாப்பட்டியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூமாப்பட்டி கிளை சார்பில் நாளை இப்திகார் நோன்பு நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. இதில், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News March 8, 2026

விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

image

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!