News March 28, 2024
அரியலூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் 100% வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாகனத்தின் மூலம் குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிபரப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Similar News
News October 29, 2025
அரியலூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
அரியலூர்: கோயிலில் திருடிய 4 பேர் கைது

நெருஞ்சிக்கோரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் கடந்த 23-ம் தேதி மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து, கோயிலில் உள்ள பித்தளை பாத்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார் மணிவேல் (50), ராஜீவ்காந்தி (35), சின்னதம்பி (24), செல்லமுத்து (49) ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News October 29, 2025
அரியலூர்: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஐயப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தில் தனசாமி-ராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் ராணி உடல்நலக் குறைவினால் திங்கட்கிழமை (அக்.27) உயிரிழந்தார். இறுதிச் சடங்கு நேற்று (அக்.28) நடைபெற்ற நிலையில், அவரது கணவராகிய தனசாமி மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியாமல் இருந்த தம்பதியினரை நினைத்து அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.


