News February 2, 2025

கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேருக்கு சிறை தண்டனை

image

சென்னை, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது தாய் பொன்னம்மாள் இருவரையும், அத்தை மல்லிகா உள்ளிட்ட 5 பேர் கடந்த 2014இல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் (32), மல்லிகா (56), சந்திரசேகரன் (40), ஆகிய மூவருக்கும் 5 ஆண்டுகளும், முத்து (55), குமார் (48), ரமேஷ் (36) ஆகிய மூவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் விதிக்கப்பட்டது.

Similar News

News August 24, 2025

காஞ்சிபுரம்: காவல்துறையில் வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 24, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.25-ம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இது போன்ற முக்கிய அறிவிப்புகளை SHARE பண்ணுங்க.

News August 24, 2025

கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!