News February 2, 2025
தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு நேற்று காலை ஆட்டோ ஓட்டுனர் சேகர் என்பவர் தனது மகன் மீது போலீசார் கஞ்சா வழக்கு போட்டிருப்பதாக மனமடைந்து காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். தற்பொழுது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
சூலூர் அருகே கார் மோதி குழந்தை பலி

சூலூர் நடுப்பாளையத்தில் ஆரோக்கியதாஸின் ஒன்றரை வயது மகள் ஜோஸ்லின், பெரியப்பா ஆண்ட்ரூஸ் காரை பின்புறமாக இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோதி பலியானார். குழந்தை பின்னால் இருப்பதை அறியாமல் காரை எடுத்ததால் இந்தச் சோகம் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


