News February 2, 2025

கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளர் பலி

image

பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பிரபாகரன் (38). புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார். நேற்று (பிப்.1) பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றபோது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 7, 2026

திருவள்ளூர் கலெக்டர் மீனவர்களுக்கு நல உதவி!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பொன்னேரி வட்டம் மெதுர் கிராமத்தை சேர்ந்த 25 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் இலவச மீன்பிடி வலை (கன்னி வலை மற்றும் மீன்பிடி தள்ளு வலை) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினர்.

News March 7, 2026

திருவள்ளூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

image

திருவள்ளூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

பள்ளிப்பட்டு: மது போதையில் நண்பனை கொன்றவர் கைது

image

திருவள்ளூர்: பள்ளிப்பட்டை சேர்ந்த மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ், நண்பர்கள். பிரகாஷுக்கு, கடந்தாண்டு ரூ.10,000 மகேஷ்பாபு கடனாக கொடுத்திருந்தார். நேற்று(மார்ச் 6) காலை இருவரும், பாழடைந்த தனியார் பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மகேஷ்பாபு, மீண்டும் பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளார். மதுபாட்டிலை உடைத்து, மகேஷ்பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.

error: Content is protected !!