News March 28, 2024
₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இம்முடிவை அரசு இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப, 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில், தேதி குறிப்பிடப்பட்ட கடன் பத்திரங்கள், தங்க பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவை வாயிலாக இந்த நிதியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.
Similar News
News January 22, 2026
சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் சிக்கினான்

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமி, வயிற்றில் குழந்தையை சுமப்பது பேரவலம். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டா மூலம் 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். இந்த விஷயம் வெளியே தெரியவர, சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 22, 2026
BREAKING: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

ஒருதலை காதல் காரணமாக கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.கல்லூரியில் IT முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்காததால் கல்லூரி வளாகத்தில் வைத்தே அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 22, 2026
தனிச் சின்னத்தில் தமாகா போட்டி: ஜி.கே.வாசன்

NDA-வில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் NDA-வில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டணி 100% முழுமை பெற்றவுடன் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும், தமாக தனிச்சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.


