News March 28, 2024

வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி மோசடி

image

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில், “2013-2024 வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் ₹2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 6,659 மோசடிகள் இடம்பெற்றுள்ளன”எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2026

கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (18.03.2026) அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.

News March 18, 2026

FLASH: அதிமுக EX அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக மனு!

image

அதிமுக EX அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ED விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக MP கிரிராஜன் இந்த மனுவைத் தொடர்ந்துள்ளார். SP வேலுமணி, தங்கமணி, MR விஜயபாஸ்கர், KP அன்பழகன், C விஜயபாஸ்கர், காமராஜ், KC வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News March 18, 2026

காங்., திமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

image

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில், பங்குனி அமாவாசை என்பதால் காங்கிரஸ், திமுகவினர் போட்டிபோட்டு அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

error: Content is protected !!