News February 1, 2025

இன்ஷூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு நல்லதா?

image

இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடுக்கான (FDI) உச்சவரம்பு தற்போது 74%-லிருந்து, 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இத்துறையில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து, உள்நாட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக மாறலாம். தனியார் நிறுவனங்களில் கிளெய்ம் வாங்குவதே பொதுமக்களுக்கு பெரும்பாடாக இருக்கும் நிலையில், அந்நிய நிறுவனங்களின் பங்களிப்பு உயர்வது, அதை மேலும் சிக்கலாக்கலாம்.

Similar News

News March 12, 2026

திருவாரூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 12, 2026

அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.

News March 12, 2026

மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

image

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!