News February 1, 2025
நிதிநிலை அறிக்கையுடன் பார்லிமென்ட் வந்த FM நிர்மலா

ஜனாதிபதியை திரெளபதி முர்முவை சந்தித்த பிறகு நிதிநிலை அறிக்கை ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட் வந்தடைந்தார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, நிதித்துறை செயலாளர் பாண்டே ஆகியோரும் உள்ளனர். PM மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.
Similar News
News March 30, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்!

*நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது *நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது
News March 30, 2026
தமிழக அரசுக்கு எதிராக போராடினோம்: பெ.சண்முகம்

ஊழலை ஒரு அளவீடாக கொண்டால், யாருடனுமே கூட்டணி சேர முடியாது என CPM-ன் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசுத் துறைகளில் அரங்கேறிய ஊழலுக்கு எதிராக CPM போராட்டம் நடத்தியிருக்கிறது என்றும், கூட்டணியில் இருப்பதாலேயே அவர்கள்(திமுக) செய்யும் ஊழலுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் கூறினார். மேலும், திமுக அரசுக்கு எதிராக CPM போராடிய விஷயங்களை வைத்து பல புத்தகங்களை போடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 30, 2026
இந்தியாவை நோக்கி வரும் 94,000 மெட்ரிக் டன் LPG

பெட்ரோல் பங்க்குகளில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 94,000 மெட்ரிக் டன் LPG உடன் 2 கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், மார்ச்சில் 2.9 லட்சம் கேஸ் இணைப்புகள் வீடு & வணிக பயன்பாடு உள்ளிட்டவைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


