News February 1, 2025

கும்பகோணம்: விபத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் பலி

image

கும்பகோணம் அருகே இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா் கருணாகரன் (43). கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக உதவியாளராக பணியாற்றும் இவர், நேற்று (ஜன.31) உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு தன் டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரைக்கால் மெயின்ரோடு சீனிவாசநல்லூா் பகுதியில் எதிரே வந்த டூவீலர் கருணாகரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News March 3, 2026

தஞ்சை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

தஞ்சாவூர்: தவெக கூட்டத்திற்கு அனுமதி

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நாளை (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக போலீசாரிடம் கட்சியினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News March 3, 2026

தஞ்சை: பாலியல் வழக்கில் தலைமறைவானவர் கைது!

image

பாப்பாநாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றம் சுமத்தப்பட்ட கவிதாசன் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கவிதாசனை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!