News February 1, 2025

தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் வெட்டிக்கொலை

image

பைனான்ஸ் தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் இ-சேவை மைய வாலிபரை கொலை செய்ததாக கைதான பைனான்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார். கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) இ-சேவை மையம் நடத்தி வந்தார். இவர் கடந்த 28ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News

News August 21, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு பொதுமக்கள் உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 21, 2025

தி.மலை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தி.மலை: டிகிரி போதும்; ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த சூப்பர் வாய்ப்பை டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!