News March 27, 2024
இரட்டை இலை சின்னம் முடக்கம்?

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது 29ஆம் தேதி முடிவெடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். அதிமுகவுக்கு தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அப்படி ஒதுக்காத பட்சத்தில் அதனை இபிஎஸ் அணிக்கு கொடுக்காமல் முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News January 16, 2026
BREAKING: விஜய் முக்கிய முடிவு

அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசிய தவெகவின் CTR நிர்மல் குமார், தேவை ஏற்படும் போது நிச்சயமாக விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் என்றும், அவருக்கு பயம் கிடையாது எனவும் கூறியுள்ளார். ஒருவேளை விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியாக என்ன கேட்கலாம்?
News January 16, 2026
கிஃப்டாக வரும் புத்தகங்களை ஸ்டாலின் என்ன செய்வார்?

CM மற்றும் DCM ஆகியோருக்கு கிஃப்டாக வரும் அனைத்து புத்தகங்களும் TN-ல் உள்ள நூலகங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க விரும்பும் சில புத்தகங்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் என கூறியவர், ஏதேனும் நூலகத்திற்கு புத்தகங்கள் தேவைப்பட்டால், CM, DCM ஆகியோருக்கு கடிதம் எழுதலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
தென்கொரிய Ex அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தென்கொரிய Ex அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களைத் திரித்து உருவாக்கியது மற்றும் ராணுவச் சட்டத்திற்கு தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற தவறியது ஆகிய குற்றத்திற்காக பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மிக கடுமையான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


