News February 1, 2025

தொப்பையை குறைக்க வேண்டுமா?

image

*நாள்தோறும் காலை எழுந்ததும் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அல்லது டீ குடிக்கலாம்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் (திரிபலா) ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி சுடு தண்ணீர் (அ) பாலில் கலந்து குடிக்கலாம்.
*காலை எழுந்தவுடன் வெந்தய நீர் குடித்தால் செரிமானத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.
*தினமும் காலையில் பெருஞ்சீரக (சோம்பு) நீரை பருகினால் தொப்பை குறையும், பசி கட்டுப்படும்.

Similar News

News March 15, 2026

மதியம் தயிர், மோர் குடிப்பதால் தூக்கமின்மை குறையுமா?

image

தூக்கமின்றி அவதிப்படுவோருக்கு மலிவான விலையில் ஒரு முடிவு கிடைத்துவிட்டது எனலாம். ஏனென்றால், தயிரில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் தூக்கமின்மையை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, மதியம் தயிர் (அ) மோர் குடிப்பது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் தயிர் குடிப்பதால் செரிமானக் கோளாறு உண்டாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE

News March 15, 2026

சென்னை தொகுதியை குறிவைக்கிறாரா வானதி?

image

கோவை தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன், இம்முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியானது. இதனிடையே, இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி அதிமுகவில் இருந்து வெளியேறிய வடவள்ளி சந்திரசேகரை EPS மீண்டும் கட்சியில் சேர்த்ததாக கூறப்பட்டது. இதனால் கோவை வடக்கு கிடைக்காது என அறிந்த வானதி, சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

News March 15, 2026

மக்கள் நாயகன் VR சுவாமிநாதன் காலமானார்

image

1971-ல் இந்தியா – பாகிஸ்தான் போரில் தீரத்துடன் பணியாற்றிய மக்கள் நாயகனான ஓய்வுபெற்ற பிரிகேடியர் VR சுவாமிநாதன்(94) கோவையில் காலமானார். இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் கோவா விடுதலை, நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு ஆற்றியவர். அவரது உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

error: Content is protected !!