News January 31, 2025
நம்மை நோக்கி வரும் ஆபத்து

வானில் திரியும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதுவதற்கு 1% வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ‘2024 YR4’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 2032ஆம் ஆண்டு பூமியை நெருங்குகிறது. இது பூமியில் மோதினால், ஹிரோஷிமா அணுகுண்டை விட 500 மடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும், ஒரு பெரிய நகரமே அழிந்துபோகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விண்கல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
Similar News
News March 3, 2026
காதலனை கொலை செய்த நடிகை சிக்கினார்

பெங்களூருவில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து லிவ் -இன் பார்ட்னரை தீர்த்துக் கட்டிய துணை நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்த மோகன கிருஷ்ணாவும், கணவனை பிரிந்த ஊர்வசியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, வினய் என்பவருடன் ஊர்வசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை மோகன கிருஷ்ணா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வசி, வினய்யுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரை கொன்றுள்ளார்.
News March 3, 2026
சந்திர கிரகணம்.. இதை நிச்சயம் செய்ய வேண்டும்!

<<19289388>>சந்திர கிரகணத்தையொட்டி<<>> என்னென்ன செய்ய வேண்டும் என இந்து சாஸ்திரத்தில் ஒரு சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி, கிரகணம் முடிந்து அடுத்த நாள் காலையில் வீட்டை துடைக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் சாமி படத்திற்கு விளக்கேற்றி பூஜை செய்த பின்னரே சமையலறைக்கு சென்று புதிதாக சமைத்து சாப்பிட வேண்டுமாம்.
News March 3, 2026
தொகுதிக்குள் லாரிலாரியாக பரிசை இறக்கும் SP வேலுமணி

தனது கோட்டையாக உள்ள கோவையில் மீண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என ’வாரி வழங்கும்’ வேலைகளில் அதிமுக இறங்கியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் பரிசுகளை அதிமுக இறக்கியது. அதன் தொடர்ச்சியாக தனது தொகுதியில் 25,000 ஓட்டுகள் உள்ள SC, ST மக்களுக்கு லாரிகளில் கொண்டுவந்த 200 லி டிரம்களை விநியோகித்து வருகிறாராம் SP வேலுமணி. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


