News January 31, 2025
ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்: மோடி

பொய் செய்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக ஆம் ஆத்மி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே ஆம் ஆத்மியின் ஊழல் முறைகேடுகளை வெளியிடுவோம் என்றார். பாஜகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என டெல்லி மக்கள் விரும்புவதாகவும், அது விரைவில் நிறைவேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது புதிய அப்டேட்

தமிழ்நாட்டில் ஏப்.15-ல் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மற்றொருபுறம் ECI-யும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் தமிழகம் வருகை தந்துள்ளது. சுமார் 70 பேர் கொண்ட CRPF வீரர்கள் சென்னை KK நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
News March 7, 2026
ஈரான் போர் இப்போதைக்கு முடியாது போலயே?

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரை நிறுத்த பல நாடுகள் சமரசம் செய்ய முன்வருவதாக ஈரான் அதிபர் மசூத் கூறியுள்ளார். உலக அமைதிக்காக பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்ற அவர், ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தயங்கமாட்டோம் எனவும் பேசியுள்ளார். மேலும், சமரசம் செய்யும் நாடுகள் முதலில் இஸ்ரேல், USA-விடம் அதுபற்றி பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.


