News January 31, 2025
இன்று ஏற்றம்! நாளை எப்படி?

இந்திய பங்குச்சந்தைகளை பொறுத்தவரையில், ஜனவரி மாதம் மிகவும் மந்தமாகவே இருந்தன. ஆனால், மாதத்தின் கடைசி நான்கு நாள்களில் நல்ல ஏற்றத்தை வெளிப்படுத்திய சந்தைகள், இன்று உயர்வுடனே வர்த்தகத்தை முடித்துள்ளன. இந்த 4 நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 2,100 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நாளை தாக்கலாகப் போகும் மத்திய பட்ஜெட்டில், வளர்ச்சிக்கான அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம். காத்திருங்கள்!
Similar News
News March 18, 2026
திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News March 18, 2026
FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
News March 18, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.


