News January 31, 2025
தவெகவில் 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். ஏற்கெனவே 38 மாவட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று மூன்றாம் கட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், களத்திற்கு செல்ல நிர்வாகிகள் தயங்கக் கூடாது என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 18, 2026
ஆண்மையற்றவர் எனப் பொய் புகார் கூறுவது மனக் குரூரம்: HC

ஆண்மையற்றவர் என்று கணவன் மீது பொய் குற்றம்சாட்டுவது மனக்குரூரம் என ஜார்கண்ட் HC கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்மையின்மை குற்றச்சாட்டு கணவரின் நற்பெயரை பாதிக்கும் என்பதுடன், தீவிர மனவேதனையை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விவாகரத்து வழங்கிய குடும்ப நல கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இக்கருத்தை தெரிவித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.
News March 18, 2026
திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News March 18, 2026
FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.


