News March 27, 2024
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
ஈரோட்டில் கேஸ் புக் பண்ண புது வழி!

ஈரோடு மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
தாளவாடி மலைப் பகுதியில் பெரும் சேதம்!

ஆசனூர் வனக்கோட்டம் சீரகல்லி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், கரும்பு, வாழை ஏனைய விவசாய பொருட்கள் விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அனுதினமும் சேதம் விளைவித்து வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறாது தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
News January 15, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியர் உபகரணங்களைப் பொருத்தவும், புதிய ரேப்பியர் தறிகளை விநியோகிக்கவும் விருப்பமும் அனுபவமும் உள்ள விநியோகஸ்தர்கள் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (அ) 9894360232 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


