News January 31, 2025
நெல்லை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

நெல்லை மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக நெல்லை ஆட்சியராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் சற்றுமுன் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேச்கனுக்கு(ELCOT) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் புதிய நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 3, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலையில் அதிர்ச்சி தகவல்..!

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
News March 3, 2026
நெல்லை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது – மாரிசெல்வராஜ்

நாங்குநேரியில் நேற்று இரவு சாமானிய மக்கள் மீது சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும், சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.


