News January 31, 2025
மதுரையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ அதிரடி கைது

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர், சில மாதங்களுக்கு முன்பு, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு தொடர்ந்தார். அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் கவிதாவிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. நேற்று கவிதாவிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது சார்பாய்வாளர் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
மதுரை: பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்த மோடி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர், குடும்பச் சூழல் குறித்துக் கேட்டறிந்தார்.
News March 1, 2026
FLASH மதுரை: தனி விமானம் மூலம் டெல்லி புறபட்ட மோடி..!

மதுரையில் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியான பின் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் கூட்டணி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2026
தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது : மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இக்கட்டான சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருள் மற்றும் மதுபால் குடும்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா ஆச்சு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்று பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் போதை கும்பல், ரவுடிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.


