News January 31, 2025
நெல் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி

வேலூர் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.517 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News March 3, 2026
வேலூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
காட்பாடியில் போக்குவரத்து மாற்றம் போலீசார் தகவல்

பழைய காட்பாடியில் 76ம்ஆண்டு மாடு விடும் விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சித்தூர் பஸ் நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பிரம்மபுரம் செல்லும் (கனரக வாகனங்கள் தவிர்த்து) ஓடை பிள்ளையார் கோயில் ஜங்ஷனில் திரும்பி வி.ஜி.ராவ் நகர் வழியாக பிரம்மபுரம் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News March 3, 2026
வேலூர் : தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <


