News January 31, 2025
சென்னை அருகே பூட்டிய வீட்டுக்குள் 2 சடலங்கள்

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் பூட்டிய வீட்டுக்குள் தந்தை, மகள் உடல்கள் ரசாயனத்தால் பதப்படுத்தி வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமுவேல் சங்கர் (78), மகள் சிந்தியாவின் (37) வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே பூட்டை உடைத்து போலீஸ் சாேதித்தது. இதில் 2 பேரின் சடலங்கள் கிடைத்தன. இதில் சிந்தியாவை கொன்றதாகவும், சடலங்களை மறைத்ததாகவும் அவரின் காதலர் டாக்டர் எபினேசரை போலீஸ் கைது செய்தது.
Similar News
News March 7, 2026
தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
News March 7, 2026
விஜய்க்கு மேலும் அதிர்ச்சி.. கண்ணீர்விட்ட புஸ்ஸி ஆனந்த்

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதற்கு அருகிலுள்ள வில்லிவாக்கத்தில் போட்டியிட புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டாராம். ஆனால், அங்கு ஆதவ் களமிறங்குவார் என விஜய் கூறியதால் அவர் மனமுடைந்ததாக தகவல் கசிந்துள்ளது. பின்னர், நேற்று வந்த சிலருக்காக நீண்டநாள் விசுவாசியான தன்னை அவமதிப்பதா என விஜய்யிடம் அவர் கண் கலங்கினாராம். விவாகரத்து பிரச்னையை தொடர்ந்து, சீட் சிக்கல் எழுந்துள்ளதால் விஜய் அப்செட்டில் உள்ளாராம்.
News March 7, 2026
இந்தியாவின் பாதுகாப்பில் ஈரானின் கப்பல்

இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட ஈரானின் IRIS DENA போர்க்கப்பலில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்தியா உதவவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், Vizag-ல் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற IRIS LAVAN போர்க்கப்பல் தற்போது பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக ஈரான் கூறிய நிலையில், இந்தியா உடனடியாக IRIS LAVAN-ஐ கொச்சியில் நிறுத்த அனுமதித்துள்ளது.


