News January 31, 2025

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ரிஷிவந்தியம் அடுத்த அதையூர் சேர்ந்தவர் முபாரக்அலி (36). பெயிண்டரான இவர் காட்டுஎடையாரில் வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த அலுமினியத்தால் ஆன பெயின்ட் ரோலர், அருகில் சென்ற மின்கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். முபாரக்அலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Similar News

News August 19, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் வங்கி வேலை…

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <>www.ibps.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 19, 2025

கள்ளக்குறிச்சி: இலவச வீடியோகிராபி பயிற்சி

image

தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு கேமரா (ம) டிசைனிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-30 வயதிற்குப்பட்டஇளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள். உணவு, தங்கும் விடுதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க. யூஸ் ஆகும்.

News August 19, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு விடுத்துள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவில் 1முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!