News January 31, 2025

பஸ் டயர் வெடித்து விபத்து பெண் தொழிலாளி படுகாயம்

image

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி (38). இவர் அரவக்குறிச்சியில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். இவர் பேருந்தில் மணல்மேடு அருகே சென்று கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் ரேவதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 12, 2025

கரூர்: ராஜவாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் பலி!

image

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நேதாஜி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (55), ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

கரூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!