News January 30, 2025
தென்காசி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் வரும் பிப்.,1 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், தென்காசி, கடையம், சுரண்டை, சாம்பவர் வடகரை, புளியங்குடி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுண், ஆலங்குளம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்*
Similar News
News July 10, 2025
தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஜீலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 18ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. முகாமில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மறக்காம ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
கணவர் மடியில் பிரிந்த மனைவியின் உயிர்

குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் திரண்டு வந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சார்ந்த ராமநாதன், தெய்வானை தம்பதியினர் நேற்று இரவு 11 மணியளவில் குளித்துவிட்டு நடந்து செல்லும் பாதையில் இருந்த போது கணவர் மடியில் சாய்ந்து நிலையில் தெய்வானைக்கு மூச்சு திணறல் காரணமாக உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
News July 10, 2025
தென்காசியில் குடும்ப பிரச்சனை; பெண் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி, சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கருப்பன் மனைவி முருகலட்சுமி (45) . நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் விசாரணை.