News January 30, 2025
ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. அப்போது புகைப்படங்கள் ஏதும் எடுக்கக் கூடாது, ஊடகங்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி தரக்கூடாது, ஜகபர் அலி உடலை ஆய்வு செய்ய தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், மேலும் இந்த இந்த ஆய்வு திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
புதுகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (பாகம்-2)
News November 8, 2025
புதுகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
புதுகை: பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் தண்டனை

திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(39). இவர் 2023 இல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் திருமயம் மகளிர் போலீஸார் போக்சோவில் சின்னச்சாமியை கைது செய்தனர். வழக்கை விசாரித்த புதுகை மகளிர் கோர்ட் நீதிபதி கனகராஜ் சின்னச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 21ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


